யோசித்த பின் நேசி ஆனால்....நேசித்த பின் யோசிக்காதே அது நீ நேசித்த இதயத்தை காய படுத்தி விடும்"

Saturday, August 8, 2009

வாழ்த்து அட்டை!!!

நாளை பிறக்கப்போகும்
நன்நாளை வாழ்த்திட,
நேற்றே எவனோ
எதையோ எழுதிவிட்டான்..!
அவன் யாரென்றே தெரியாது..
இருப்பினும்.. கச்சிதமாய்
உன் சொந்தங்களை பாடுகிறான்..

அவன் யாரடா உன்
துணைவியை வர்ணிக்க??
அதுவும் உன் திருமண நாளில்!!

ஆனால் நீயோ..
வாழ்த்த கடன்பட்டும்,
வார்த்தைக்கு வக்கில்லாமல்..
நாடிச் செல்கிறாய்
வாழ்த்து அட்டைகளை..!

உன் துணைவியோ.. அந்த
வர்ண அட்டையின்
வசீகர வார்த்தை கண்டு
வகை வகையாய் சிரிக்கிறாள்..
வெட்கத்தில்..!

என்னவோ போ..!

1 comment:

Sundar said...

Anu, it is my favorite...

Nice One!!!!!!!!!!good all the best.

By
Sundar