யோசித்த பின் நேசி ஆனால்....நேசித்த பின் யோசிக்காதே அது நீ நேசித்த இதயத்தை காய படுத்தி விடும்"

Sunday, October 4, 2009

Yanathu Neasam

எனது நேசம்

பற்றற்று வாழ நினைத்தேன்
உன்னை பார்க்கும்
முன்பு வரை..
ஏனோ இன்று
பற்று வந்து என்னை பற்றி
கொண்டுவிட்டது.
என்னை அறியாமல்

உன்மீது கொண்ட நேசத்தால்.
உன் மீது கொண்ட
பாசமெல்லாம்
வெறும் வேஷம் என்று
எண்ணிவிடாதே.

உன் மீது ஆனா
என் நேசமெல்லாம்
எனக்கான தேசம் அது!

நான் சிந்தும் ஒவ்வொரு
கண்ணீர் துளியும்
என்றாவது ஒரு நாள்
என் நேசத்தை உன்மனத்தில்
துளிர் விட செய்யும்
என்ற நம்பிக்கையில்
என் மனமும்
என் உடலும்
காற்றில் கரையாமல்
காத்திருக்கின்றது

No comments: