யோசித்த பின் நேசி ஆனால்....நேசித்த பின் யோசிக்காதே அது நீ நேசித்த இதயத்தை காய படுத்தி விடும்"

Sunday, July 22, 2012

Manaivi

என் தோளோடு தலைசாய்க்க. . !

தோழியைபோல் தோள் கொடுக்க. . !

நிஜத்தை உணரவைக்க. . !

நிழலாய் கூடவர. . !

என்னுயிராய் வந்தவள்

என் பிரியமான மனைவி. . !

எத்தனை யுகம்தான்

தவம் இருந்தேன். . !

எத்தனை காலம்தான்

விழித்திருந்தேன். . !

என் உயிரை தேடி அலைந்தேன். . !

என் உயிர் என்னிடம்

சேருமா இன்று

என் உயிர் காணமல்

என் ஆயுள் முடிந்துவிடுமா

என்று அச்சம் கொண்டேன். . !

கண்டுகொண்டேன் அவளை

அழகாக சிரித்துகொண்டிருந்தாள். . !

என்னுள் ஆட்சி செய்பவள். . !

என் உயிரை கண்டபிறகு

பேசதுடித்தேன் அவளிடம். . !

முதன் முதலில் அவளின்

இனிய குரலை கேட்டேன். . !

என்னையே மறந்தேன். . !

எனக்கு அவள் தோழி ஆனாள். . !

பிறகு காதலி ஆனாள். . !

பின் என்னுள் பாதி ஆனாள். . !

அவள்தான் என் உயிரானவள். . !

என் உயிர் மனைவி ஆனவள். . !

எனக்கான உலகம் முழுவதும்

நீயாகவே இருக்கிறாய். . ! ♥ ♥ ♥ ♥ ♥

1 comment:

Unknown said...

மனைவிக்கோர் அர்த்தம் விளக்கிய கவிதை, நன்றி. மேலும் தேடல் ஊற்றெடுக்கும் போது, இரசனைக்கு பஞ்சமோ!, தங்களை இரசனையில் மயக்கும் தமிழ் கவிதைகள் இது.

Tamil Kavithaikal