யோசித்த பின் நேசி ஆனால்....நேசித்த பின் யோசிக்காதே அது நீ நேசித்த இதயத்தை காய படுத்தி விடும்"

Sunday, July 22, 2012

Azhana Kavithai

கம்பன் சிந்தையில் தவறியதும்

எந்த கவிஞர்

கைக்குள் எட்டாததுமான

கவியோன்று

புனைய அவள் சொன்னாள்

என்னிடம். . !

கற்பனையை புரட்டினேன். . !

மதி முகம் மல்லிகை வாசம். . !

மான் விழி. . !

தேன் மொழி என்றேன். . !

செல்லாது செல்லாது என்றாள். . !

மரகதத்தால் இழைத்த

மாணிக்க வீணை மதியை வென்ற

மன்மதன் தேனீ

எவரும் மீட்டாத எனக்கான வீணை. . !

என்றேன் சிரித்தாள். . !

சிதறியது சிந்தை கண்ணால்

கேலி செய்தாள். . !

ஒரு நிமிடம் யோசித்தேன். . !

இரு வரியில்

ஒரு வரிக்கவிதை எழுதினேன். . !

ஏதுவும் சொல்லவில்லை. . !

அவள்

மௌனமானாள். . !

ஆனால்

அவள் அழகுக்கண்கள் சொல்லியது

இதுவும்

அழகான கவிதை என்று. . ! ♥ ♥ ♥ ♥ ♥

No comments: