யோசித்த பின் நேசி ஆனால்....நேசித்த பின் யோசிக்காதே அது நீ நேசித்த இதயத்தை காய படுத்தி விடும்"

Sunday, November 1, 2009

என்னவளே

என்னவளே.......!

எப்போதும் உன்னோடு இருக்க வேண்டும்
என்று இறைவனிடம் கேட்டேன்.......!

உன் இமைகளாகச் சொன்னான்...!
உறங்கி விடுவேன் என்று உதறி விட்டேன் ....!!

கண்களாகச் சொன்னான்...!
கலங்கி விடுவேன் என்று கழித்து விட்டேன்.....!!

உன் கூந்தலாகச் சொன்னான்...!
உன் முகம் மறையுமே என்று மறுத்து விட்டேன்....!!

உன் உயிராகச் சொன்னான்...!
பிரிந்து விட்டால் ,இறந்து விடுவாய் என்று உதிர்த்து விட்டேன்....!!

பின்பு தான் ..........

உன் இதயமானேன்.....!
என்றும் உனக்காக துடித்துக் கொண்டு...............

No comments: