யோசித்த பின் நேசி ஆனால்....நேசித்த பின் யோசிக்காதே அது நீ நேசித்த இதயத்தை காய படுத்தி விடும்"

Friday, October 2, 2009

நாளெல்லாம் தனிமையில்....

நாளெல்லாம் தனிமையில்
நான் இருந்த போது
தலையணையாய்
உன் நினைவுகள்
என் தலைசுமந்தன!

நீ செல்லும் பாதையில்
உன் நிழலைபோல
பின் தொடர்ந்தேன்
ஆனால் இன்று
என்னை இருட்டில் நிறுத்திவிட்டு
நீ மட்டும் வெளிச்சத்தில்... செல்கிறாய்!

யாரிடமும் காட்டாத அன்பு
முதன்முதலாய் உனைபார்த்ததும்
வந்தது
என் சந்தோசத்தின் மறு உருவம் நீ!

நான்கு வார்த்தை அன்பாய் பேச
நாள் முழுக்க சண்டை போட்டேன்..
உன்னிடம்
நாளெல்லாம் உனைநினைத்து ...
காத்திருந்த பொழுதுகள்
எல்லாம் ஏமாற்றமே!

கனமாய் போய்விட்டது மனசு
கணக்கில்லா கண்ணீரால்...
வரிவரியை எழுதிய
என்காதல் வார்த்தைகள் எல்லாம்
கானல் நீராய் போய்விட்டது..

என் நேசத்தில் இருந்து
உன் வசம் தேடிய
என் சொல்லாத வார்த்தைகள் எல்லாம்
இன்று நீ உதிர்த்த
வார்த்தையால்
செல்லாமல் போய்விட்டது..!

கால் கடுக்க காத்திருப்பேன்
உன் வீடு இருக்கும் வீதியில்
அளவில்லா என் அன்பை
கொண்டு..
உன்னை பார்க்கவேண்டும்
என்று ஆசையோடு!

நான் உன்னை பார்த்தும்
நீயோ எனக்கென்று பேசாமல்
இருப்பாய் வெகு நேரமாகியும்!
அக்கணமே கனமான வலியோடு
என் காலார நடந்து வீடு வந்தடைவேன்!

No comments: