யோசித்த பின் நேசி ஆனால்....நேசித்த பின் யோசிக்காதே அது நீ நேசித்த இதயத்தை காய படுத்தி விடும்"

Friday, October 2, 2009

Anbu Manam Veesum Lyrics

அன்பு மனம் வீசும்!
என் வேதனை யாவும்
உனக்கு
வேடிக்கையாக போய்விட்டது
தினத்தினம் இது
வாடிக்கையாக நடப்பதால்!

நேசித்துவிட்டது மனசு
பாவம் அந்த மனசுக்கு
தெரியவில்லை
உன்மனம் கல்
என்று
இருந்தாலும் முயற்சிகிறேன்
எறும்பு ஊற கல்லும் தேயிமாமே!!

உன் காலில் கொலுசு
ஒலி கேட்க்க ஆசைபட்டேன்
ஆனால்
இன்று வரை
ஏனோ
கனவில் ஒலிக்கும் ஒலியாகவே!
போய்விட்டது!

என் மனதை
தள்ளிவைப்பதிலும்
தவிக்கவைபத்திலும்
உனக்கு நிகர்
யாரும் இல்லை!

ஆயிரம் முறை
சண்டைபோட்டிருப்பேன்
ஆனால்
ஒரு முறையேனும்
உன்னை தவிர்க்க
நினைத்ததும் இல்லை
தவிக்க விட்டதும் இல்லை
இந்த மனசால்!

மறவாதே அன்பே
நான் இறந்தாலும்
என் சாம்பலில்
கூட
உனக்கான
அன்பு மனம் வீசும்!

No comments: