யோசித்த பின் நேசி ஆனால்....நேசித்த பின் யோசிக்காதே அது நீ நேசித்த இதயத்தை காய படுத்தி விடும்"

Tuesday, September 29, 2009

என்னை மறந்து விட்டாயா?

என்னை மறந்து விட்டாயா?
இனி என்னை புன்னகையில் தேடாதீர்கள்
கண்ணீர்த்துளிகளில் காத்திருக்கிறேன்
கண்ணீர் மதுவாகிறது …
———————————
எழுதிப் பாருங்கள் என் போல காதலில் தோற்று ..
எழுதுவது பாவம்
ரசிப்பது புண்ணியம்
--------------------------
நீ மனிதர்களை பாடியது போதும்.
அன்றில், மணிப்புறா, மான், .. பாடு
காதலுக்கு புல்லரித்து விடும்.
———————————————
தேயும் நிலவு, ஒழுகும் தேன்கூடு, உதிரும் மலர்
எழுதாத டைரி, எண்ணப்படாத மூளை .. இவற்றோடு நீ.
சுகிக்கப்படாதவை இப்படியே தொடருமா?
————————————————-
உன் தாலி கயிறில் தூக்குப் போட்டு தொங்கும்
உன் கனவுகளை தொட்டு விட்டு சொல்.
என்னை மறந்து விட்டாயா?

No comments: